ஏனாம் அரசு கல்லூரி முதல்வர் மயங்கி விழுந்து மரணம்
பதிவு செய்த நாள்: 19 அக் 2016 01:25
புதுச்சேரி: ஏனாம் அரசு கல்லுாரி முதல்வர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
ஏனாம் அரசு கலைக்கல்லுாரியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் முகமது பவுசி. புதுச்சேரியை சேர்ந்த இவர் ஏனாமில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து கல்லுாரிக்கு புறப்பட்டார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு, சுருண்டு விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இறந்த முகமது பவுசி புதுச்சேரி தாகூர் கலைக்கல்லுாரியில் வணிகவியல் துறை தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sources: http://www.dinamalar.com
Also visit the related links